கணுப்பிடி வைப்பதன் தாத்பர்யத்தைத் தயவுசெய்து அடியேனுக்கு விளக்கவும். என்னுடைய மாமனார் அவருடைய சகோதரிகளுக்குக் கணுவன்று என் கணவரைப் பணம் அனுப்பச் சொல்கிறார். இந்த வழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டுமா?

பெண்கள், குறிப்பாக திருமணமான பெண்கள் தங்களுடைய சகோதரர்களை அவர்கள் நினைவு வைத்துக்கொள்ளும்படியாகவும், அவர்களின் ஸ்நேகத்திற்காகவும், மேலும் குடும்பத்துடன் எல்லோரும் சௌக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் கணுப்பிடி வைப்பது. அதனால்தான் கணு அன்று சகோதரர்கள் எல்லோரும் சகோதரிகளுக்குக் கணு மரியாதையாக பைசா அனுப்புவார்கள். இது ஒரு வழக்கம். இப்போதும் எல்லோரிடமும் இருக்கிறது.
சகோதர சகோதரி பாவம் என்பது என்றும் விட்டுப் போகாமல், ஸ்நேகத்தோடு தொடரவேண்டும் என்பது கணுவின் தாத்பர்யமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top