பஞ்சகவ்யம் சாப்பிடுவதால் உடலிற்குச் சுத்தி ஏற்படுகிறது, தவிர அறிவியல் ரீதியாக தகவல் இருந்தால் விளக்கமளிக்க ப்ராத்திக்கிறேன்.

பஞ்சகவ்யம் சாப்பிடுவது அறிவியல் ரீதியாக என்பது இல்லை. பஞ்சகவ்யம் சாப்பிடுவதற்கு இரண்டு அம்சம் இருக்கிறது. ஒன்று உடலுக்குச் சுத்தி என்பது. அதாவது கோவுடன் சம்பந்தம்பட்ட சில விஷயம் நமக்குச் சுத்தியைக் கொடுக்கக்கூடியது என்று ஶாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது, அதனால் ஒரு சுத்தி. இரண்டாவது, இது ஒரு நிஷ்க்ருதி-ப்ராயஶ்சித்தம். இந்த ப்ராயஶ்சித்தமானது இனிமேல் நாம் தப்புப்பண்ணக்கூடாது என்பதற்காக.
பொதுவாக லௌகிக ரீதியில் பஞ்சகவ்யம் என்பது பலரும் வெறுக்கக்கூடிய விஷ்யம். பஞ்சகவ்யம் சாப்பிட பலரும் முகம் சுழிப்பர்.ஆனால் இது ப்ராயஶ்சித்தம், தப்புபண்ணால் அந்தத் தப்புக்கான தண்டனை நாம் அனுபவிக்க வேண்டும். அந்த ரீதியில் இது ப்ராயஶ்சித்தம் என்று வைத்துக்கொள்ளவேண்டும். முக்கியமானது இது ஶரீரத்திற்குச் சுத்தி, இனிமேல் தப்பு பண்ணாமல் இருக்க ப்ராயஶ்சித்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top