சந்த்யாகாலம் என்பது சூர்யோதயகாலம். அந்தக் காலத்தில்தான் சந்த்யாவந்தனம் பண்ணவேண்டும். அதற்கு முன் பண்ண முடியாது. அதனால் சூர்யோதயத்திற்கு முன் க்ருஹப்ரவேசம், முஹூர்த்தம் இருந்தால் அதாவது ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் அதிகாலை வேளையில் க்ருஹப்ரவேசம் பண்ணினால் அப்ப சந்த்யா காலத்திற்கு முன்தான் பண்ண வேண்டி வரும். சந்த்யா காலம் வந்தபின்தான் சந்த்யா காலத்திற்கு ப்ரஸக்தி வரும். சந்த்யா காலம் வந்தபின் சந்த்யாவந்தனம் பண்ணாமல் எதையும் பண்ணக் கூடாது என்பதுதான் சந்த்யாவந்தனம் பண்ணாமல் எந்தக் காரியம் செய்தாலும் பயனில்லை என்று சொல்வதற்குத் தாத்பர்யம். முன்னாடி க்ருஹப்ரவேசம் முஹூர்த்தம் முதலானது வைத்தால் முன்னாடி செய்யலாம்.