1. வில்வத்தைப் பெருமாளுக்கும் ஸமர்ப்பிக்கலாம். தப்பில்லை என்பது தெரிந்த விஷயம்தான். ஏனென்றால் தாயாருக்கும் பில்வ நிலயாயை நம: என்று இருக்கின்றது. அதனால் பெருமாளுக்குச் ஸமர்ப்பிக்கலாம். சிவனுக்கு அது விசேஷம் என்கின்றபடியினால் அவருக்குச் ஸமர்ப்பிக்கிறார்கள் அவ்வளவு தான்.
மேலும் திருமலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு தனுர் மாதத்தில் வில்வ இலையை ஸமர்ப்பிக்கிறார்கள் என்று கேள்வியிலேயே இருக்கின்றது. அதனால் ஸமர்ப்பிக்கலாம் என்று ஏற்படுகிறது. ஏன் தனுர் மாதத்தில் மட்டும் ஸமர்ப்பிக்கிறார்கள் என்பதற்கு விசேஷமான காரணம் என்ன என்று கேட்டுப்பார்க்கவேண்டும். எதுவாக இருந்தாலும் ஸமர்ப்பிக்கலாம் என்று ஆகிறது. அதனால் தனுர் மாதத்தில் ஸமர்ப்பிக்கலாம் என்று இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம்.
2. தனுர் மாதத்தில் பொதுவாக பொங்கல் ஸமர்ப்பிப்பதுதான் வழக்கம். அது உப்புச் சேர்த்த பதார்த்தமானதால் அதற்குப் பரிசேஶணம் கிடையாது. பரிசேஶணம் இல்லாமல் சோஶன தாஹன ப்லாவனம் பண்ணி சுத்தி செய்து ஸமர்ப்பிக்க வேண்டும்.
3. ஸ்ரீரங்கம் கோவிலில் மிகவும் ப்ராசீனமான் தன்வந்த்ரி ஸந்நிதி உள்ளது. அந்தச் சந்நிதியில் ஐப்பசி மாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தில் தன்வந்த்ரி ஜெயந்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதையே செய்யலாம்.
4. வ்யதீபாதயோகத்தில் குறிப்பிட்ட ஆராதனை, ஜபம், தானம் போன்றவற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள் யாரும் செய்யவேண்டியதில்லை. அதில் காம்யமான கர்மம் நிறைய இருக்கிறது. காம்யங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
5. வ்யதீபாத மஹாஸத்வ என்று ஆரம்பிக்கும் ஶ்லோகம் எங்கிருக்கிறது என்று அடியேனுக்குத் தெரியவில்லை. வ்யதீபாத என்பதற்கு பல அர்த்தம் உண்டு. வ்யதீபாத என்றிருந்தால் “எல்லாவாற்றையும் கடந்து நிற்பவன் என்று வரும்”. இவ்வர்த்தத்தில் இது வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. வ்யதீபாத1 அல்லது வய்தீபாத3 எது என்று சொன்னால் ஶ்லோகத்தைப் பற்றி சொல்ல வசதியாக இருக்கும். அடியேனும் பலரிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
6. பொதுவாக தர்ப்பணம் செய்வதற்கு முன் போஜனம் செய்யக்கூடாது. என்றைக்கு மாசப்பிறப்பு வருகிறதோ அன்றைக்குதான் தர்ப்பணம் செய்யவேண்டும் மறுநாள் புண்யகாலம் கிடையாது. அதனாலே மாசப்பிறப்பு வரும் நாளன்று அடியோடு முடியவேயில்லை என்றால், தர்ப்பணத்தைச் சற்று முன்னால் பண்ணிவிட்டு சாப்பிடலாம். இதுவும் மிகவும் முடியாதவர்களுத்தான். மற்றபடி கேள்வியில் கேட்டிருக்கும்படி மறுநாள் பண்ணுவதோ அல்லது சாப்பிட்டுவிட்டுத் தர்ப்பணம் பண்ணுவதோ அடியோடு கூடாது.