சரம கைங்கர்யம் பற்றி பெரியளவில் கவலைப்பட வேண்டியதில்லை என்று ஶாஸ்த்ரங்களிலே சொல்லப்பட்டிருக்கிறது. அதேசமயம் சரம கைங்கர்யத்திற்குப் பதிலாக அனுஷ்டானங்களோ, பரிஹாரங்களோ எதுவும் செய்யவேண்டுமா என்றால், அதுவும் செய்யவேண்டிய அவசியமில்லை. மேலும் பரந்யாஸம் செய்தவர்கள் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. பெருமாள் அனுக்ரஹத்தில் நன்றாக நடக்கவேண்டும் என்று தனிப்பட்ட முறையில் அவரிடமே ப்ரார்த்தித்துக்கொள்வோம். அதைப் பெருமாள் நன்றாக நடத்திக்கொள்வார். அப்படி நடந்துள்ளதை நிறைய பார்த்துள்ளோம்.