அடியேன் பிராமணன் அல்லன். ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் சிஷ்யன். சமாஶ்ரயணம் மற்றும் பரந்யாஸம் ஆகியுள்ளது. தனியாக இருக்கிறேன். முடிந்த வரையில் ஆசார அனுஷ்டானம், ஜபம், பெருமாள் ஆராதனம் முதலானவற்றை ஆசார்யன் மற்றும் பெருமாள் ப்ரீதிக்காக செய்து வருகிறேன். அடியேனுக்கு பரந்யாஸத்தின் பொழுது ஆசார்யன் இந்தத் தேக முடிவில் மோக்ஷம் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளார். அதில் எனக்கு சிறிதும் நம்பிக்கை குறைவு இல்லை. சரம கைங்கர்யத்தின் முக்கியத்துவத்தை மாறனேரி நம்பி மற்றும் பெரிய நம்பி அவர்கள் வாழ்க்கை மூலம் நன்கு அறிந்து, தர்ப்பணம் முதலானவற்றை செய்து வருகிறேன். எனக்கு குழந்தைகள் இல்லை மற்றும் என்னுடைய குடும்பத்தினருக்கு இந்த சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லை. அதனால் எனக்கு சரம கைங்கர்யங்கள் நடக்க வாய்ப்பு இல்லை. வைகுண்ட ப்ராப்தி மற்றும் எம்பெருமான் திருவடி ப்ராப்தி ஆசார்ய அனுக்ரஹத்தால் உண்டு என்பதில் எனக்கு முழு விசுவாசம் இருந்தாலும் சரம கைங்கர்யத்திற்கு பதிலாக ஏதேனும் ஆசார அனுஷ்டானங்களோ அல்லது பரிஹாரங்களோ கைக்கொள்ளலாமா? அடியேன் இதை வினவுவது பெருமாள் மற்றும் ஆசார்ய ப்ரீதிக்காகவே தவிர மற்றபடி விசுவாசக் குறைவினால் அல்ல.

சரம கைங்கர்யம் பற்றி பெரியளவில் கவலைப்பட வேண்டியதில்லை என்று ஶாஸ்த்ரங்களிலே சொல்லப்பட்டிருக்கிறது. அதேசமயம் சரம கைங்கர்யத்திற்குப் பதிலாக அனுஷ்டானங்களோ, பரிஹாரங்களோ எதுவும் செய்யவேண்டுமா என்றால், அதுவும் செய்யவேண்டிய அவசியமில்லை. மேலும் பரந்யாஸம் செய்தவர்கள் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. பெருமாள் அனுக்ரஹத்தில் நன்றாக நடக்கவேண்டும் என்று தனிப்பட்ட முறையில் அவரிடமே ப்ரார்த்தித்துக்கொள்வோம். அதைப் பெருமாள் நன்றாக நடத்திக்கொள்வார். அப்படி நடந்துள்ளதை நிறைய பார்த்துள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top