1) திருவாராதனத்தை இரண்டு சாளக்ராமங்களை வைத்து செய்யலாமா? (அதாவது இரண்டு தனித்தனி பெட்டிகளில் வைத்து மற்ற ஆசனங்களைச் செய்வது, ஸ்நானாசனத்தை இரண்டு சாளக்ராமங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாகச் செய்வது). 2) திருவாராதனத்தை (சமஸ்க்ருத ஸ்லோகங்கள் இல்லாமல்) அந்தந்த ஆசனதிற்குப் பொருத்தமான ஆழ்வார்/தேசிக பிரபந்த பாசுரங்களை மட்டும் சொல்லிச் செய்யலாமா? 3) திருவாராதனத்தில் சந்தனம் அரைப்பதற்கு சர்வார்த்த தோய (அல்லது) அர்க்கிய வட்டிலில் இருந்து நீரை எடுக்கலாமா?

பொதுவாக இரண்டு சாளக்கிராமம் வைத்துக்கொள்ளக்கூடாது என்று இருக்கிறது, அப்படி ஒருவேளை இரண்டு சாளக்கிராமம் வைத்திருந்தால், கேள்வியில் குறிப்பிட்டுள்ளது போல் தனித்தனியாக இரண்டு பெட்டியில் வைத்து, ஒன்றன் பின் ஒன்றாக திருவாராதனம் செய்வது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 சாளக்கிராமம் வரும் வரை இதுபோல் செய்யவேண்டும் என்றும், மேலும் இரண்டு சாளக்கிராமத்தை சம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
உங்களுடைய ஆசார்யனிடம் கேட்டு அப்படிச் செய்யலாம் என்று அவர் அனுமதிக் கொடுத்தால் தாராளமாகச் செய்யலாம். தங்களுடைய ஸமாஶ்ரயண ஆசார்யனிடம் கேட்டால் அவர் சொல்லிக்கொடுப்பார். அவரின் அனுமதி பெற்றபின் செய்யலாம்.
சந்தனம் எடுப்பதற்கு சர்வார்த்த தோயத்தில் இருந்து நீரை எடுக்கலாமா என்றால் எடுக்கலாம். அதைக்காட்டிலும் திருக்காவேரியில் ஜலம் இருக்கிறதே அந்த ஜலத்தை எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top