மந்திரோபதேசம் பண்ண ஆசார்யன் ப்ரதான ஆசார்யன் என்று ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருக்கிறார். அதே போல் ஸமாஶ்ரயணம் நடந்த பரம்பரையை வைத்து கல்யாணம் முதலியவற்றைப் பண்ணவேண்டும் என்றொரு ஸம்ப்ரதாயம் இருக்கிறது. இங்குக் கல்யாணம் என்று குறிப்பிட்டிருப்பது கல்யாணத்தின் ஸம்பாவனை போன்றவை.
ஆகையால் நீங்கள் ஸமாஶ்ரயணம் ஆன முனித்ரய ஸம்ப்ரதாயப்படி செய்வது சரியாக இருக்கலாம். மற்றது தவறு என்று சொல்லமுடியாது. ஒரு கட்டுக்கோப்பில் வருவதற்காக இந்தப் பரம்பரையைப் பின்பற்றுவது என்று சொல்லியிருப்பதாக வைத்துக்கொள்ளெலாம்.