மாங்கல்ய ஸ்தவம் ஶ்லோகத்தில் மாங்கல்யம் என்ற பதம் பொதுவாக அனைத்து மங்கல விஷயங்களையும் குறிக்கும்படி அமைந்துள்ளது. க்ருஹத்தில் இருக்கக்கூடிய சுமங்கலி ஸ்த்ரீ என்ற அர்த்தத்தில் மட்டும் வரவில்லை. அதாவது அனைத்து மங்கல விஷயங்களுக்கும் என்ற ஒரு பரந்த நோக்கத்தோடு கூறப்பட்டுள்ளது.ஆகையால் அனைவரும் (கைம்பெண்களும்) சேவிக்கலாம் என்று தோன்றுகிறது.