1. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு, துவாதசி மற்றும் அமாவாஸை அன்று துளசி க்ரஹிக்கூடாது என்றுள்ளது, மன்வாதி யுகதினம் என்று ஒரு வார்த்தை உள்ளது அப்படியென்றால் என்ன என்று தெரிவிக்கவும் ஸ்வாமி. 2. ஒரு வருடத்தில் என்றைக்கெல்லாம் நாம் துளசியைச் செடியிலிருந்து க்ரஹிக்கக்கூடாது?

மன்வாதி, யுகாதி தினங்களில் துளசி க்ரஹிக்கக்கூடாது என்றிருக்கிறது. பஞ்சாங்கத்தில் மன்வாதி, யுகாதி தினங்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஒவ்வொரு யுகம் ஆரம்பிக்கக்கூடிய நாள் அதற்கு யுகாதி என்று பெயர் அதாவது கலியுகம் ஆரம்பிக்கக்கூடிய நாள். அதே போல் யுகம் என்பது எப்படிக் காலத்தைக் குறிக்கிறதோ, அதேபோல் மன்வந்த்ரம் என்பதும் ஒரு காலமாகும். அந்த காலம் ஆரம்பிக்கக்கூடிய நாள் மன்வாதி என்று பெயர். அந்த நாட்களில் க்ரஹிக்கக்கூடாது என்று கணக்கு. அதை அவ்வளவு தீவிரமாகப் பார்ப்பதில்லை. அப்படித் தெரிந்தால் துளசி க்ரஹிக்காமல் இருப்பது நல்லது.
கேள்வியில் கூறியிருப்பது போல் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை முதலான கிழமைகளிலும், அமாவாஸை, மாதப்பிறப்பு போன்ற தர்ப்பண தினங்களிலும், துவாதசி அன்றைக்கெல்லாம் துளசி க்ரஹிக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top