ஸ்ரீ ஜெயந்தி ஸ்ரீராமநவமி ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜெயந்தி போன்ற பண்டிகை நாட்களில் முனித்ரய சம்ப்ரதாயக்காரர்கள் ஏகாதசியை போல் வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும். மறுநாள் எப்படி துவாதசி பாரணை செய்கிறோமோ, அதேபோல் அகத்திக்கீரை நெல்லிக்காய் சுண்டைக்காய் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். புளி இல்லாமல் துவாதசிக்கு எப்படித் தளிகை செய்கின்றோமோ அதேபோல் பண்ண வேண்டும்.