சாதாரண நாட்களில் முந்தைய நாளோ அல்லது அன்றைய தினம் தீர்த்தமாடுவதற்கு முன் நறுக்கிய காய்கறிகளை தீர்த்தமாடிவிட்டு நல்ல ஜலத்தில் அலம்பிவிட்டு உபயோகப்படுத்தினால் பரவாயில்லை. ஆனால் அமாவாஸை, மாசப்பிறப்பு, ஶ்ராத்தம் போன்ற விசேஷ நாட்களில் கண்டிப்பாக அப்படி உபயோகப்படுத்தக்கூடாது.
துவாதசி அன்று மட்டும் முதல்நாள் நறுக்கிய காய்கறிகளை நன்றாக அலம்பிவிட்டு உபயோகப்படுத்தலாம்.