ஐப்பசி துலாமாச காலத்தில் காவேரி ஸ்நானம் மிகவும் விசேஷம். இதில் கடைசி ஸ்நானம் என்பது ஒரு பெரிய விசேஷமில்லை இதற்குப் பின் அடுத்தவருடம்தான் துலா ஸ்நானம் வரும் என்பதால் கடைசி பக்ஷம் கடைசிநாளாவது பண்ணவேண்டும் என்பதுதான்.
யாரோ ஒரு முடவன் (காலால் நடக்க முடியாதவன்) ஸ்நானம் பண்ணவேண்டும் என்று வந்தபோது மாசக்கடைசியாயிற்று ஐப்பசி மாசம் முடிந்து கார்த்திகை மாதம் பிறந்தாயிற்று அவன் வரமுடியாமல் கஷ்டப்பட்டதாகவும், அப்படி கஷ்டப்பட்டு வந்து அடுத்த மாதம் பிறந்தாலும் அவனுக்காக துலா காவேரி ஸ்நானம் பலனைத் தந்ததாகவும் கதை சொல்கிறார். அதனால் கடைசிநாளானாலும் அடுத்தமாதத்தின் முதல்நாளானாலும் துலா ஸ்நான பலன் உண்டு என்பதுதான் இதன் தாத்பர்யம்.