போஜ்யாசனத்தில் கண்டருளப்பண்ணுதலுக்கும் அம்சை பண்ணுவதற்கும் உள்ள வித்யாசம் என்ன? எப்படி இரண்டையும் செய்தல் வேண்டும் என்று விளக்கவும்.

கண்டருளப்பண்ணுவதும் அம்சைபண்ணுவதும் இரண்டும் ஒன்றுதான். எம்பெருமான் அமுதுசெய்வதாக நாம் நினைத்துக்கொண்டு அவனுக்கு அமுதுசெய்விக்க வேண்டும். ஒரு தாயார் எப்படி தன் குழந்தைக்கு ஊட்டி விடுவாளோ அதே போல் எம்பெருமானுக்கு நாம் ஊட்டிவிடும் பாவத்தில் அமுதுசெய்விக்கணும். அதை எம்பெருமான் கண்டு அருளப்பண்ணுகிறான் (அருள்கிறான்) ஆகையால் இரண்டும் ஒன்றே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top