ஶரணாகதி என்பது நாம் நம்மை அவனிடம் ஒப்படைத்துவிடுதல் என்பதும் அதன் பின் நம் பரத்தைப்பற்றி கவலைக்கொள்ளாமல் இருத்தல் வேண்டும் என்பது சென்ற சுதர்சனம் மூலம் புரிந்துகொண்டேன். ஒருவருக்கு செய்த ஶரணாகதி கவலைதரும்படி இருந்தால் அவர் தன் ஆத்மாவைச் சரியாக ஸமர்ப்பிக்கவில்லை என்று அர்த்தமா? அவர் மீண்டும் அதை ஸமர்ப்பிக்கவேண்டுமா? அல்லது நாம் நம் பரத்தைச் சரியாகச் ஸமர்ப்பிக்கவில்லை என்றாலும் நம் ஆசார்யன் தானே நமக்காக ஸமர்ப்பிக்கிறார். அவர் அதைச் சரியாகதானே செய்திருப்பார். அதனால் செய்த ஶரணாகதி குறையில்லாமல் தானே இருக்கும். இதை எப்படிப் புரிந்துகொள்வது?

ஶரணாகதி நடந்து முடிந்தபிறகு ஒருவருக்கு விஶ்வாஸத்தில் குறைவேற்பட்டால், அந்த மந்த விஶ்வாஸத்தை மஹாவிஶ்வாஸமாக எம்பெருமானே ஆக்கி அவனைக் கரைச்சேர்க்கிறான் என்று ஸ்வாமி தேஶிகன் சாதிக்கிறார்.
ஆசார்யன் நமக்காக ஶரணாகதி செய்திருக்கிறார் என்பதில் விஶ்வாஸம் இருத்தல்வேண்டும்.நாமாகச் செய்தால் சரியாக செய்திருக்க மாட்டோம் எனலாம், ஆனால் அது உக்தி நிஷ்டையோ, ஆசார்ய நிஷ்டையோ அது ஆசார்யன் மூலமாகத்தான் ஶரணாகதி நடக்கிறது என்கிறபோது நிச்சயமாக ஆசார்யன் நமக்காக விஶ்வாஸத்தோடு, சரியாகப் பண்ணியிருப்பார் என்று நம்பணும். ஆசார்யன் மேல் விஶ்வாஸம் குறையாமல் இருத்தல்வேண்டும் அவர்மேல் நம்பிக்கையிருந்தாலே ஶரணாகதி பலித்து மோக்ஷம் கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top