ஶரணாகதி நடந்து முடிந்தபிறகு ஒருவருக்கு விஶ்வாஸத்தில் குறைவேற்பட்டால், அந்த மந்த விஶ்வாஸத்தை மஹாவிஶ்வாஸமாக எம்பெருமானே ஆக்கி அவனைக் கரைச்சேர்க்கிறான் என்று ஸ்வாமி தேஶிகன் சாதிக்கிறார்.
ஆசார்யன் நமக்காக ஶரணாகதி செய்திருக்கிறார் என்பதில் விஶ்வாஸம் இருத்தல்வேண்டும்.நாமாகச் செய்தால் சரியாக செய்திருக்க மாட்டோம் எனலாம், ஆனால் அது உக்தி நிஷ்டையோ, ஆசார்ய நிஷ்டையோ அது ஆசார்யன் மூலமாகத்தான் ஶரணாகதி நடக்கிறது என்கிறபோது நிச்சயமாக ஆசார்யன் நமக்காக விஶ்வாஸத்தோடு, சரியாகப் பண்ணியிருப்பார் என்று நம்பணும். ஆசார்யன் மேல் விஶ்வாஸம் குறையாமல் இருத்தல்வேண்டும் அவர்மேல் நம்பிக்கையிருந்தாலே ஶரணாகதி பலித்து மோக்ஷம் கிட்டும்.