லோகத்தை மோஹிப்பதற்காக பகவானே புத்தனாக அவதாரம் பண்ணி, ஒரு தர்சனமும் இல்லாமல் நாத்திகம் பேசுபவர்களை ஏதோ ஒரு சின்னவழியில் கொண்டுவருவதற்கு எம்பெருமான் முயற்சிக்கிறார். அதனால் அவனே புத்தனாக அவதாரம் பண்ணி இவ்வழியில் கொண்டுவந்து பின் வந்தவன் அம்மதத்தில் உள்ள தவறை உணர்ந்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் வருவான் என்பதாக எம்பெருமானின் எண்ணம். இவையெல்லாம் பகவானின் லீலைகள். புத்தன் என்பவன் எம்பெருமான்தான். ஆனால் அதற்காக நாம் புத்தனைச் சேவிக்கமுடியாது.