பகவதி என்கிற பதம் தாயாரை நிச்சயமாகக் குறிக்கும். “பகவதி ஶ்ரீயம் தேவி” என்று ஸ்வாமி பாஷ்யகாரர் கத்யத்தில் ஆரம்பிக்கும்போதே சாதித்துள்ளார்.
பகவதி என்றால் ஆறு குணங்களை உடையவள். அதாவது ஞான, பல, ஐஶ்வர்ய, வீர்ய, சக்தி, தேஜஸ் என்ற ஆறு குணங்களை உடையவள் என்று பொருள். எம்பெருமானுக்கும் இதே காரணத்தினால்தான் பகவான் என்று பெயர். அந்தப் பகவானுடைய மகிஷி பகவதி. அவளுக்கும் அதே ஆறு குணங்கள் உடையவள் என்று அர்த்தம்.
கேரளாவில் பகவதி என்பது பார்வதி தேவியைக் குறிக்கும். ஒரு அபிமானத்தில் அவர்கள் வைத்துக்கொண்டுள்ள பெயர். நாம் எப்படி எம்பெருமான் மீதுள்ள அபிமானத்தினால் பெயர் வைத்துக்கொண்டுள்ளோமோ அதேபோல்தான். மேலும் ஈஶ்வரன் என்றால் சர்வேஶ்வரனான எம்பெருமானைத்தான் குறிக்கும் ஆனால் ஈஶ்வரன் என்ற பெயர் சிவனுக்கு ஏற்பட்டதாக கருதப்படுகிறது அதேபோல்தான் பகவதி என்ற பெயரும். பகவதி என்றால் தாயார்தான் ஆனால் ப்ரசித்தமாக பார்வதிதேவிக்கு அமைந்துவிட்டது.