பரந்யாஸம் ஆகும்முன் பரந்யாஸம் ஆகவேண்டும் என்ற த்வரை மற்றும் சதாசார்யன் அனுக்ரஹத்தினால் பரந்யாஸம் ப்ராப்தமாக வேண்டும் என்ற ஆசை இருக்கவேண்டும். இவ்வெண்ணங்களே பரந்யாஸம் ஆகும்முன்னர் இருத்தல்வேண்டும்.
பரந்யாஸம் ஆனபிறகு பல விஷயங்கள் பின்பற்றவேண்டும். அதிலும் முக்கியமாக இவ்விரண்டு விஷயங்கள் தவிர்க்கவேண்டும். தேவதாந்திர சம்பந்தமும், பாகவத அபசாரமும் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். இப்படிக் கைக்கொள்ளவேண்டிய மற்றும் கைவிட வேண்டிய விஷயங்கள் நாம் செய்வதன் நோக்கம் பவகத் ப்ரீத்தியாகும். எம்பெருமான் ஶாஸ்த்ரம் சொல்லியபடி நடந்தால் ப்ரீத்தியாவான். ஆகையால் ஶாஸ்த்ரம் சொன்ன ஆஹார நியமம்படி, அதாவது நிஷித்தமான பொருட்களையெல்லாம் தவிர்த்து ஶாஸ்த்ரம் சொன்ன வழியில் நாம் ஆஹாரம் உட்கொள்ளவேண்டும். இயன்றளவு வெளியே சாப்பிடுவதைத் தவிர்த்தல்வேண்டும். தேவதாந்தர சம்பந்தம் கூடாது. திவ்யதேசங்களுக்குப் போகலாம். அபிமான ஸ்தலம், புராண ஸ்தலம் போன்றவற்றிற்குச் செல்லலாம். வேறுகோயில்களுக்கு போவதைத் தவிர்த்தல் வேண்டும்.