நம் ஸம்ப்ரதாயத்தில் ஜபம் செய்யும்போது துளசி, வேப்ப அல்லது தாமரை மாலைகளை ஸ்த்ரீகள் மற்றும் புருஷர்கள் ஏன் உபயோகிப்பதில்லை? ஸ்த்ரீகள் ஜபம் செய்ய என்ன மாலையைப் பயன்படுத்தவேண்டும்?

இக்கேள்விக்கு ஸ்த்ரீ தர்ம ரீதியாக மட்டும் இங்கே பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்த்ரீகள் ஜபம் செய்ய மாலை தேவையில்லை. கை விரலின் எண்ணிக்கை வைத்துக்கொண்டே சுலபமாக ஜபம் செய்யலாம்.
ஜபம் செய்யும் முறையை பொதுவாக மந்திரோபதேசம் ஆகும் போதே ஆசார்யன் சொல்லிக்கொடுத்திருப்பார். கட்டைவிரலை விட்டு மீதி நான்கு விரல்களைக்கொண்டு ப்ரதக்ஷிணமாக எண்ணிக்கை செய்தால் 10 வரை எண்ணிக்கைகள் வரும். அதாவது ஆள்காட்டி விரலுடைய கீழ்ப்பகுதியில் ஆரம்பித்து வரிசையாக ப்ரதக்ஷிணமாக எண்ணிக்கொண்டுப்போனால் நடுவிரலின் கடைசிபாகத்தில் (கீழே) 10 என்ற எண்ணிக்கையில் முடியும். இப்படியாக 10 என்ற கணக்கில் பண்ணலாம். மானசீகமாக எத்தனைப் பத்து என்பதை நினைவில் வைத்துக்கொண்டு ஜபிக்கலாம். ஸ்த்ரீகள் பொதுவாக 108க்கு மேல் ஜபிப்பது என்பது ஏற்பட்டதில்லை. ஆகையால் கையாலே சுலபமாக எண்ணிக்கொண்டு பண்ணிவிடலாம். நம் பெரியவர்களும் அப்படியே பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top