ஏகாதசி அன்று சிறுதானியங்களை உபயோகப் படுத்தி ஏதாவது பதார்த்தங்கள் செய்தால் அதை உடைக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அதை அப்படியே உபயோகிக்கலாம். அதாவது உடைத்து உபயோகப்படுத்த வேண்டும் என்பது அரிசியைப் பொருத்த மட்டும் தான். பாக்கி சிறுதானியங்களுக்கு உடைக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.
துவாதசி அமாவாசை அன்று சிறு தானியங்கள் சேர்த்துக் கொள்ளலாமா என்றால் , ப்ரதானமான ப்ரசாதமாக சிறுதானியம் பண்ணலாமா என்று கேட்டால் அப்படிப் பண்ண வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. சாதம் என்பதுதான் முக்கியமாக அன்றைக்குப் பண்ண வேண்டும். சிறுதானியம் தான் சாப்பிட முடிகிறது, சர்க்கரை நோய், அன்னம் சாப்பிட முடியவில்லை என்று இருந்தாலும் கொஞ்சமாக பரிசேஷனத்திற்கு தேவைப்படுகிற அளவு துளி அன்னம் சேர்த்துக்கொண்டு அதற்குமேல் சிறுதானியங்களைச் சாப்பிடலாம் என்று தோன்றுகிறது.
சிறுதானியங்களில் கேழ்வரகு திணை, குதிரைவாளி இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.