க்ரஹணம் சம்பவிக்கும் நாளில் புண்ய காலத்திற்குப் பிறகு குளித்தபின் தர்ப்பணம் செய்பவர் மற்றும் தர்பணம் செய்யாதவர் முக க்ஷௌரம் (முடி திருத்தம்) செய்து கொள்ளலாமா? தர்ப்பணம் செய்தவர்கள் இரவில் பலகாரம் செய்ய வேண்டுமா? உதாஹரணத்திற்கு சமீபத்தில் முடிந்த சந்திர க்ரஹணம் சம்பவம்.

க்ரஹணம் தர்ப்பணத்திற்கு பலகாரமில்லை ஆகையால் பலகாரம் பண்ணவேண்டிய அவசியமில்லை. க்ரஹணத்திற்குப் பிறகு அன்றைய தினமே தர்ப்பண தினமாக இருக்கின்றபடியாலே சாதாரணமாக புண்யகாலமாக இருக்கிறபடியால் க்ஷௌரம் பண்ணக்கூடாது. மறுநாள் என்றால் ஒருநாள் விட்டு மறுநாள் பண்ணுவதென்றால் பண்ணிக்கொள்ளலாம் அதுவே எப்போதும் பிரதமையாக இருக்கும் பிரதமை நாளில் க்ஷௌரம் பண்ணும் வழக்கமில்லை.
முக க்ஷௌரம் என்று ஶாஸ்த்ரத்தில் இல்லை அப்படி பண்ணிக்கொள்ளகூடாது என்பதுதான் ஶாஸ்த்ரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top