பெருமாளுக்குத் திருமஞ்சனத்தின் பொழுது ஒரே ஒரு மஞ்சள் அல்லது வெள்ளை வஸ்திரம் மட்டுமே சாற்ற வேண்டும் என்று ஆகம ஶாஸ்திரத்தில் ஏதேனும் உள்ளதா ?

ஆகம ஶாஸ்திரத்தில் ஒரே ஒரு வஸ்த்ரம்தான் சாற்றவேண்டும் என்று இல்லை. ஆனால் இது சௌகர்யத்திற்காக வந்தது. பெருமாள் திருமேனிக்கு நன்றாகத் திருமஞ்சனம் பண்ண வேண்டும் என்றால், ஏகப்பட்ட வஸ்த்ரங்கள் சாற்றி இருந்தால் பெருமாள் திருமேனிக்கு எப்படி நன்றாகத் திருமஞ்சனம் பண்ண முடியும். அதேபோல் ஒரே வஸ்த்ரத்துடன் ஸ்நானம் செய்யக்கூடாது என்கின்ற நியமங்கள் நமக்குத் தான். ஶாஸ்திரங்கள் எல்லாம் நமக்குத்தான். ஶாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லையே பெருமாள். அதனால் ஏதோ பெயருக்கு ஒரு வஸ்திரம் நனையக்கூடியதாக ஒரு வஸ்திரம் ஒன்று சாத்திவிட்டு திருமஞ்சனம் செய்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top