அந்தர்யாமி பெருமாளுக்கும், ஆவேச அவதார பெருமாளுக்கும் என்ன வித்தியாசம்? எங்கு, எப்படிப் பெருமாளின் ஆவேசம் நிகழ்கிறது?

அந்தர்யாமி பெருமாள் என்றால் எல்லோருக்கும் உள்ளே அதாவது மனுஷ்யர்கள் என எல்லாவற்றிலும் உள்ளே பகவான் ஒரு திவ்ய ரூபத்தை எடுத்துக்கொண்டுள்ளார். யோகம் பண்ணுவதாக இருந்தால் இந்த அந்தர்யாமி பெருமாளை த்யானம் பண்ணலாம். பொதுவாகவே பெருமாள் எல்லோருக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறான்.
ஆவேச அவதாரம் என்பது பெருமாள் ஒன்றன் உள்ளே தன் சக்தியையோ, ஸ்வரூபத்தையோ விசேஷமாக ஆவேசம் பண்ணுவார் என்பதாகும். அந்தர்யாமி என்பது பொதுவானது. ஆவேசம் என்பது சில விசேஷ வ்யக்திகளிடம் எம்பெருமானானவன் தன் சக்தியை ஆவேசம் பண்ணி அதன்மூலமாக விசேஷமான காரியங்களைச் சாதிப்பார்.உ.தா பரசுராம அவதாரம். எல்லோருக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார் ஆனால் பரசுராமரின் உள்ளே பெருமாள் ஆவேசம் பண்ணப்படியால்தான் இத்தனை அபூர்வமான காரியங்களைச் செய்யமுடிந்தது. அதேபோல் வ்யாஸர் அவதாரம். எல்லோரும் ஞானி ஆனால் வ்யாஸர் வேதங்களைத் தொகுத்து,மஹாபாரதத்தை அமைத்து, வேதாந்த சூத்ரங்களைப் பண்ணி, பூராணங்களைத் தொகுத்து என அநேகங்களைப் பண்ணியிருக்கிறார். இவைகளை மனிதர்களால் பண்ணமுடியாது. இவை சாத்தியப்பட்டது பகவத் ஆவேசத்தினால். அப்படியென்றால் எம்பெருமான் தன் அம்சத்தைக் கொண்டு விசேஷமான சக்திகளையெல்லாம் உபயோகித்து அவர் மூலமாக பல காரியங்களை நடத்துகின்றார் என்று அர்த்தமாகும். இதற்குப் பெயர்தான் ஆவேச அவதாரமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top