பரஸமர்ப்பணம் பண்ணிய பிறகு சாந்தி ஹோமங்கள் பண்ணும் வழக்கமில்லை. பரஸமர்ப்பணம் என்றால் எம்பெருமானுக்கு ஆத்மாவை ஸமர்ப்பணம் பண்ணிவிட்டோம் என்றாகும். அதனால் க்ருஹ சாந்தி, சர்ப சாந்தி, பரிஹாரங்களெல்லாம் செய்யவேண்டாம். பெருமாளைக் குறித்து ஸஹஸ்ரநாம பாராயணம் என்பதெல்லாம் செய்யலாம்.