பாதுகா ஸஹஸ்ரம் நித்யம் சேவிக்க ஏதேனும் விதிமுறைகள் இருக்கா? காலையில் சேவிக்க முடியவில்லையென்றால் சாயங்காலம் சேவிக்கலாமா?

பாதுகா ஸஹஸ்ரம் நித்யம் சேவிப்பதற்கு தனியான விதிமுறைகள் எல்லாம் கிடையாது. இது ஸ்தோத்ரமானபடியினால் எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம். காலையிலோ சாயங்காலமோ ராத்திரியோ எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம்.
ஒரு பலனைக் குறித்து விசேஷ பாராயணமாக சங்கல்பம் செய்து கொண்டு சொல்வதாக இருந்தால் அப்பொழுது காலையில் ஆகாரத்திற்கு முன் சேவிப்பது நல்லது. மற்றபடி பொதுவான ஸ்தோத்ரபாட பாராயணம் என்பதை எப்பொழுது வேண்டுமானாலும் பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top