பெருமாளை ஏன் அக்ஷதை சேர்த்து வழிபடக் கூடாது? இந்தத் தடை சாளக்கிராம பெருமாளுக்கு மட்டுமா அல்லது விக்ரஹ, த்வாரகா சிலா பெருமாள்களுக்குமா?

சாளக்கிராமம், விக்ரஹ ரூபமான பெருமாளுக்கு நித்யப்படி திருவாராதனம் ஜலம் மூலமாகப் பண்ணவேண்டும் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அக்ஷதை மூலமாகப் பெருமாள் திருவாராதனம் என்பது ஒரு ப்ரகாரம். ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்தில் ப்ரதானமாகப் பெருமாள் ஏளியிருக்கும்போது தீர்த்தம் முதலியவற்றால் திருவாராதனம் பண்ணச்சொல்லியிருப்பதால் நாம் பண்ணுகிறோம். சில சமயம் கும்பத்தில் ஆவாஹனம் பண்ணும்போது அக்ஷதை சேர்ப்பார்கள். அதில்லாமல் ஶௌநக பகவான் சொல்லியிருக்கும் சில ப்ரக்ரியைகள் இருக்கிறது. அவற்றைக் காட்டிலும் ஸ்ரீ பாஞ்ச்சராத்ர ஆகம ப்ரக்ரியை ப்ரதானம் என்பதால் அதைப் பண்ணிக்கொண்டிருக்கிறோம். அதுவே விசேஷமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top