ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதாரம் என்பது மஹாப்ரதோஷம் தினத்தில் அல்ல சதுர்தசியில்தான் அவதாரம். பொதுவாகவே சாயங்காலம் அஸ்தமன காலத்திற்கு ப்ரதோஷ காலம் என்று பெயர். அந்த ரீதியில் அவருக்கு அது விசேஷம் என்றிருக்கிறது. மேலும் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஆராதனம் மஹாப்ரதோஷ காலத்தில் விசேஷம் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது அதனால் நாம் அதைப்பண்ணுகிறோம்.
“ந்ருஸிம்ஹம் ராகவம் விநா” என்று ப்ரதோஷ காலத்தில் ராகவனையும் சேவிக்கலாம் என்று ஆகமங்களில் சொல்லப்படிருக்கிறது. தனிப்பட்டதாக என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளதால் சிலர் அனுஷ்டானத்தில் ப்ரதோஷ காலத்தில் ராகவனையும் சேவிப்பது என்று கொண்டுள்ளனர். வேறு சிலர் ந்ருஸிம்ஹனைத் தவிர யாரையும் சேவிப்பதில்லை என்றும் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ ந்ருஸிம்மருக்கு பானக நைவேத்யம் விசேஷம் என்று சொல்லியிருக்கிறபடியினாலேயும், ஸம்ப்ரதாயத்தில் இருக்கின்ற படியினாலேயும் நாம் செய்கின்றோம்.