ஸ்ரீ வராஹந்ருஸிம்ஹ மூர்த்தி அஹோபிலத்திலும், சிம்மாசலத்திலும் ஏளி இருக்கிறார். அதாவது வராஹப் பெருமாளும் நரசிம்ம பெருமாளும் சம்பந்தம் உள்ளவர்கள். ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, இவர்கள் இருவரும் இரட்டையர்கள். அவர்களை வதம் செய்வதற்காக வராஹப் பெருமாளாகவும் ந்ருசிம்ஹ பெருமாளாகவும் ரூபம் எடுத்தார் எம்பெருமான். பெரிய ஆபத்தை போக்கியவர்கள். ந்ருஸிம்ஹ மூர்த்தி என்று வரும்பொழுது ஆகமங்களில் பலவிதமான மூர்த்திகளை ப்ரதிஷ்டை பண்ணுவதற்குச் சொல்லி இருக்கிறார்கள். அதில் வராஹ ந்ருஸிம்ஹ மூர்த்தி என்பவரும் ஒருவர். அதை அந்தத் திவ்யதேசங்களில் ப்ரதிஷ்டை செய்திருக்கிறார்கள் அவரைதான் நாம் சேவிக்கின்றோம்.