வேறு வழியில்லை என்றால் சாளக்கிராம பெருமாளைப் புகைவண்டியில் ஏளப் பண்ணிக் கொண்டுப் போகலாம். அந்தப் பெருமாளைப் பத்திரமாக ஒரு பெட்டியில் ஏளப் பண்ணி, மேலே சால்வை, பட்டு முதலான வஸ்திரங்களால் அவரைச் சுற்றி, சுத்தமாக அவருக்கு எந்தவிதமான அசுத்தமும் படாதபடி அவரை அப்படியே ஒரு பையில் வைத்து ஏளப் பண்ணவேண்டும். அந்தப் பையை கீழே வைக்கக்கூடாது. அசுத்தம் படுகின்ற இடத்தில் வைக்கக்கூடாது. முடிந்தவரை தன்னிடத்திலேயே அந்தப் பையை வைத்துக்கொண்டு மரியாதையுடன் அவரை ஏளப் பண்ண வேண்டும்.