நாம் நித்யமும் தேவரிஷி, காண்டரிஷி தர்ப்பணம் செய்து வந்தால்(உபாகர்மா நாளில் செய்வது போல்) மாலையில் பலகாரம் மட்டுமே உட்கொள்ள வேண்டுமா?

நித்யம் செய்யும் தேவரிஷி, காண்டரிஷி தர்ப்பணத்திற்கு மாலையில் பலகாரம் உண்டா என்றால் கிடையாது. செய்யவேண்டிய அவசியமும் இல்லை. மேலும் உபாகர்மா நாளில் தேவரிஷி பித்ருரிஷி தர்ப்பணத்திற்காக பலகாரம் என்று சொல்லப்படவில்லை. அது காயத்ரி ஜபத்திற்குக்காக சொல்லப்பட்டவை. அதாவது முதல்நாள் சாப்பிடாமல் இருந்து அடுத்தநாள் காயத்ரிஜபம் செய்யவேண்டும் என்றிருக்கிறது. முழுபட்னியிருக்க முடியாதவர்களுக்கு முதல்நாள் பலகாரம் என்று சொல்லியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top