மகாலக்ஷ்மித் தாயார் பற்றியதுதான் வரலக்ஷ்மி நோன்பு என்று இருக்கும் பொழுதும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அதை கொண்டாடுவதில்லை என்றால் வரலக்ஷ்மி விரதம் ஏற்பட்ட வரலாறாக இருக்கக்கூடும். ஒரு காம்யார்த்தமான விஷயம், அதாவது ஒரு பெண்மணி மகாலக்ஷ்மியை குறித்து ஐஶ்வர்யத்தை வேண்டி இந்த விரதத்தை இருந்தாள். அதைப் பின்பற்றி வழக்கம் ஏற்பட்டது என்று கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாகவே ஸ்ரீ வைஷ்ணவர்கள் காம்யார்த்தமாக எந்த ஒரு வழிபாட்டையும் செய்வதில்லை. எம்பெருமானுடைய வழிபாடாகவே அவருக்கே கைங்கரியம் செய்வதுதான் ஸ்ரீ வைஷ்ணவருடைய லக்ஷ்ணமாக இருக்கின்றது. இந்தப் பண்டிகை ஆரம்பித்த வரலாறு அப்படி இல்லாததனால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இதை கொண்டாடுவதில்லை என்று தோன்றுகிறது. இப்படி இருக்கின்ற பொழுதிலும் இந்த வரலக்ஷ்மி விரதம் பண்ணி சில க்ருஹங்களில் வெற்றிலை பாக்கிற்கு அழைப்பார்கள். அப்படி அழைத்தால் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்த்ரீகள் போய் தாம்பூலம் வாங்கிக் கொள்வது என்பதும் இருக்கின்றது.