இக்கேள்வி முழுவதாக புரியவில்லை. அதாவது ஏன் வேறுபடுகிறது என்ற கேள்வியின் அபிப்ராயம் தெளிவாக இல்லை. தங்கள் சந்தேகத்தை விரிவாகப் பதிவிடவும்.
வேதங்கள் வ்யாசரால் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த வேதத்திற்கு ஏற்றாற் போல் உபாகர்மாக்களை ஶ்ருதிகள் ஸ்மிருதிகள் விதித்து இருக்கிறது. ஒருவரால் அனைத்து வேதங்களையும் அத்யயனம் பண்ணமுடியாது. அதனால் மனிதர்களில் சௌகர்யத்திற்காக வ்யாசபகவான் பிரித்துக்கொடுத்திருக்கிறார். அந்தந்த வேதத்தின் ரிஷிகளைக் குறித்து சொலப்பட்ட அந்தந்தக் காலத்தில் உபாகர்மா பண்ணுகிறோம் என்பதுதான்.