பட்டுப் பூச்சியிலிருந்து பட்டு எடுக்கப்படும்பொழுது ஸ்த்ரீகள் பட்டுப் புடவை உடுத்திக் கொள்வது மடி என்று சாஸ்திரத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா?

பட்டுப் பூச்சியில் இருந்து பட்டு எடுப்பதினால் அதை உபயோகப் படுத்தலாமா கூடாதா என்பதில் சர்ச்சைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. அப்படி இருந்த பொழுதிலும் பெரியோர்கள் வழக்கத்தில் பார்த்ததில் அடியேன் இவ்விடத்தில் விண்ணப்பிக்கிறேன். பெரியோர்கள் க்ருஹங்களில் ஸ்த்ரீகள் பட்டுப் புடவை தரித்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. சில க்ருஹங்களில் பட்டுப் புடவை தரித்துக்கொண்டு வைதீக காரியங்கள் செய்வதும் வழக்கத்தில் இருக்கின்றது. அவரவர்கள் க்ருஹத்தில் எப்படி வழக்கமோ அப்படிச் செய்யலாம். சில க்ருஹங்களில் பட்டு மடிதான் என்று ஏற்றுக்கொண்டுள்ளதை இன்றைக்கும் காணலாம். சிலர் அதை ஒப்புக் கொள்வதில்லை. அவரவர் க்ருஹங்களில் பெரியோர்கள் எப்படிச் செய்கிறார்களோ அப்படிச் செய்வது உசிதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top