பிச்சம் ஏகாதசி (நாம் கொண்டாடும் ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி ) மற்றும் ஹரிவாசரம் (அதாவது துவாதசிக்கு முந்தைய நேரம்) இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எவ்வாறு தெரிந்து கொள்வது ?

பிச்சம் ஏகாதசி என்றால் மறுநாள் ஏகாதசி பிச்சம் இருந்தால் அன்றும் ஏகாதசி வ்ரதம் இருக்கவேண்டும்.
ஹரிவாசரம் என்பது துவாதசி திதியினுடைய முதல் கால் பாகத்திற்கு ஹரிவாசரம் என்று பெயர். துவாதசி எத்தனை நாழிகை இருக்கிறது என்று பார்க்கவேண்டும். உ.தா: துவாதசி 60 நாழிகை இருந்தால் முதல் 15 நாழிகைக்கு ஹரிவாசரம் என்று பெயர் அது ஏகாதசிக்குத் துல்யம் அப்போது ஆஹாரம் சாப்பிடக்கூடாது.
சில சமயம் துவாதசி முன்னாளே ஆரம்பித்தால் கூட மறுநாள் முதல் கால்பாகம் முடியும்வரை ஹரிவாசரம் என்றிருக்கும். அன்று துவாதசி எத்தனை நாழிகை இருக்கு என்பதைப் பொறுத்து இந்தக் கால்பாகம் மாறும். பஞ்சாங்கத்திலே எத்தனை நாழிகை ஹரிவாசரம் என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top