வ்ருத்தி தீட்டின் பொழுது சில தளர்வுகள் வைத்துக் கொள்வது என்பது வழக்கத்தில் உள்ளது. பிறர் க்ருஹங்களுக்குப் போகவேண்டும் என்கின்ற அவசியமில்லை. ஏனென்றால் பொதுவாகத் தீட்டு என்பது எதற்காக வைத்திருந்தார்கள் என்றால் அந்தச் சமயத்தில் அந்தக் காரியத்தில் குறி இருக்கணும் என்பதற்காக. அதனால் பொதுவாக வெளியே செல்வது என்பது கிடையாது. ரொம்ப முக்கியமாக தவிர்க்க முடியாத ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்றால் அந்த இடத்திற்குப் போய், தள்ளி நின்று இருந்து விட்டு வரலாம். குங்குமம் இட்டுக் கொள்ளலாம். இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவதிலும் ஒரு தவறும் இல்லை. அதுவும் வழக்கத்தில் உள்ளது. வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை.