முனித்ரய ஸம்பரதாயம் பற்றிய சந்தேகம்: நாம் பல சந்தர்ப்பங்களில் விரதம் இருக்கின்றோம் (ஏகாதசி, ஶ்ரவண துவாதசி, ஸ்ரீ இராம நவமி, ந்ருஸிம்ஹ ஜயந்தி, க்ரஹண காலம் ஒருவேளை மோக்ஷம் சூர்ய அஸ்தமனம் பின் சம்பவித்தால்), இப்படி இருக்கும் சமயங்களில் அடுத்தநாள் பாரணை தளிகைதான் பண்ணவேண்டுமா அல்லது எப்போதும் போல் தளிகை பண்ணலாமா?

ஏகாதசி, ஶ்ரவண துவாதசி, ஸ்ரீ இராம நவமி, ந்ருஸிம்ஹ ஜயந்தி ஸ்ரீ ஜெயந்தி முதலிய வ்ரதங்களுக்கு மறுநாள் பாரணை தளிகைதான் செய்வது வழக்கம். புளி சேர்க்கும் வழக்கமில்லை. க்ரஹணத்திற்குப் பிறகு சாப்பிடக்கூடாது என்பது நிஷித்தம்தான், அது வ்ரதமில்லை. அதனால் க்ரஹண காலத்தில் க்ரஸ்தாஸ்தமனமாக இருந்ததானால் அதற்குப் பிறகு பாரணை செய்யும் வழக்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top