ஏகாதசி, ஶ்ரவண துவாதசி, ஸ்ரீ இராம நவமி, ந்ருஸிம்ஹ ஜயந்தி ஸ்ரீ ஜெயந்தி முதலிய வ்ரதங்களுக்கு மறுநாள் பாரணை தளிகைதான் செய்வது வழக்கம். புளி சேர்க்கும் வழக்கமில்லை. க்ரஹணத்திற்குப் பிறகு சாப்பிடக்கூடாது என்பது நிஷித்தம்தான், அது வ்ரதமில்லை. அதனால் க்ரஹண காலத்தில் க்ரஸ்தாஸ்தமனமாக இருந்ததானால் அதற்குப் பிறகு பாரணை செய்யும் வழக்கமில்லை.