மாஸ்யம், ஊனம் முதலானவையெல்லாம் விடாமல் பண்ணவேண்டும்.
முடிந்தவரைக்கும் ஆஹாரத்தில் சுத்தமாக இருத்தல்வேண்டும். வெளியே சாப்பிடுவதை இயன்றளவு தவிர்த்தல்வேண்டும். நன்றாகச் சுத்தமாக நம் பந்துக்களும் இருந்தால் அவர்கள் அகத்தில் சாப்பிடலாம். ரொம்ப நியமத்துடன் இருப்பவர்கள், பரான்ன நியமம் என்று சொல்வார்கள் அதாவது நாமே சம்பாதித்து, நாமே தயாரித்துச் சாப்பிடும் ஆஹாரம் என்று சொல்வார்கள். இதன் நோக்கமாவது ஆஹாரத்தில் அசுத்தம் கலக்கக்கூடாது என்பதாகும்.
அதன் பின் இந்த ஒருவருட நியமங்கள் என்பது, தீர்த்தயாத்திரை போகக்கூடாது, மலையேற கூடாது, ஸமுத்ர ஸ்நானம் கூடாது போன்றவையாகும். ஏன்னெறால், தீர்த்தயாத்திரைக்குப் போகிறேன் என்று பண்ணவேண்டிய மாஸ்யங்களெல்லாம் விட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்நியமங்களெல்லாம் வைத்துள்ளார்கள்.
மாஸ்யங்களும் சுத்தியும்தான் மிகவும் முக்கியமான ஒன்று. மற்றபடி நித்யகர்மானுஷ்டானங்களைப் பண்ணிக்கொண்டு பெருமாளைச் சேவித்துக் கொண்டிருந்தாலே போதுமானதாகும்.
பின்குறிப்பு: மாசிகம், ஊனம் பற்றிய அனுஷ்டாங்கங்கள் அனைத்தும் கேள்வி கேட்டவர் மூத்தவராக இருந்தால் அனைத்தும் பண்ணவேண்டும். அவர் இளையவர் என்றால், அவரின் மூத்த சகோதரர் செய்யும் கைங்கர்யங்களுக்கு உறுதுணையாக இருந்தாலே போதுமானதாகும்.