திருவாய்மொழியில் முதல் பாசுரத்தில் முதல் மூன்று அடிகளின் முதல் எழுத்து ப்ரணவத்தைக் குறிக்கும் என்றும் ஆனால் அதன் வரிசை மாறியிருக்கும் என்றும் சொல்வர். சிலர் ஆழ்வார் வேதம் ஓதும் குலத்தில் பிறக்காததனால் இவ்வாறு இயற்றியுள்ளார் என்கின்றனர். இந்தக் காரணம் சரியா? அப்படியென்றால் இதே காரணத்தினால்தான் அமலனாதிபிரானிலும் திருப்பாணாழ்வார் இதேபோல் ப்ரணவத்தை பாசுரத்தில் முதல் எழுத்தாக குறிப்பிட்டுள்ளாரா?.

ஆழ்வார்கள் விஷயத்தில் அவர்கள் தாழ்ந்த பிறப்பில் பிறந்தவர்கள் என்று நினைப்பதே பாபம்.
அவர்களெல்லாம் நித்யஸூரிகளின் அம்சமாக அவதரித்தவர்கள். ஆகையால் அவர்களை தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என நினைப்பது மஹாபாபமாகும். அவர்களின் ப்ரபந்தங்களில் அ கார,உ கார, ம காரங்கள் மாறியிருப்பது என்பதெல்லாம் வ்யாக்யானங்களில் வரும் விசேஷம் அதாவது வ்யாக்யான வைகரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top