என் பேரன் 17 ஜூன் அதிகாலை 01.18am IST அப்போது பிறந்தான், அவனுக்கு புண்ணியாகவாசம் 27ஆம் அல்லது 28ஆம் செய்ய வேண்டுமா?

இராத்ரி நேரத்தை, அதாவது முதல்நாள் சூர்ய அஸ்தமனத்திலிருந்து மறுநாள் சூர்யோதயம் வரை இருக்கும் பாகத்தினை 8 சமபங்கு பாகங்களாக்கி, அதில் முதல் 5 பாகத்திற்குள் உட்பட்டால் முதல்நாள் என்றும் அதன்பிறகு கடைசி மூன்று பாகத்திற்குள் உட்பட்டால் மறுநாள் என்றும் கணக்கிட வேண்டும்.
இப்படித் தான் முதல்நாள் மறுநாள் என்ற கணக்கு, ஜனனத்திலோ, மரணத்திலோ, ரஜஸ்வலையிலோ எடுத்துக்கொள்வது வழக்கம்.
குறிப்புகள்:
இராத்ரி நேரமென்பது சூர்யோதய, சூர்ய அஸ்தமனத்தை வைத்துச்செய்வதால் ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடும். ஆகவே அந்தந்த ஊரின் சூர்யோதய, சூர்ய அஸ்தமன நேரத்தை வைத்து இராத்ரி நேரத்தை கண்க்கிட்டு, பின் மேற்சொன்னபடி 8 சம பாகங்களாக பிரித்து முதல்நாள்/மறுநாள் என்பதை கணக்கிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top