” ஆசார்யன் திருநக்ஷத்ரம் நிர்ணயம்: 1. சூர்யோதயத்தில் ஜன்ம திருநக்ஷத்ரம் 1 விநாடி இருந்தாலும்கூட போதுமானதா ? 2. நக்ஷத்ரம் 2 நாட்களில் வந்தால் எந்த நாளைக் கொள்வது? 3. வேதை : திருநக்ஷத்ரத்தில் வேதை விலக்கு (முந்தைய நக்ஷத்ரம் நேரம்) உண்டா? 4.திருநக்ஷத்ரம் குறைந்தது 12 அல்லது 16 நாழிகைகள் போன்று இருக்க வேண்டுமென்றால், அது சூர்ய அஸ்தமனத்திற்குள் இருக்க வேண்டுமா? அல்லது அடுத்த நாள் காலை சூர்யோதயம் வரைக்கும் இருந்தால் கூட போதுமானதா ? 5. மேற்கூறிய நிர்ணயத்தை ஶ்ரவண நக்ஷத்ரம் அல்லது நக்ஷத்ரம் ஆதாரமாகக் கொண்ட (வாமன, ஹயக்ரீவ) ஜயந்திக்கும் கொள்ளலாமா?

ஆசார்யன் திருநக்ஷத்ரம் நிர்ணயம்
சூர்யோதயத்தில் ஜன்ம திருநக்ஷத்ரம் 1 விநாடி இருப்பது போதாது.
அந்தத் திருநக்ஷத்ரம் சூர்யோதயத்திலிருந்து 12 நாழிகை எந்த நாளில் இருக்கிறதோ அந்த நாளில் கொண்டாடுவது.
ஆசார்ய திருநக்ஷத்ரத்தில் வேதை விலக்கு இல்லை.
அந்தத் திருநக்ஷத்ரம் குறைந்தபக்ஷம் சூர்யோதயத்திலிருந்து 12 நாழிகை இருத்தல் வேண்டும்.
வாமன, ஹயக்ரீவ ஜயந்தி போன்றவற்றிற்கு திருநக்ஷத்ரம் மாத்திரம் பார்த்து நிர்ணயம் செய்வதில்லை, சில விஷயங்களில் திதிகளும் கணக்கில் உண்டு.ஆனால் நாம் இப்போது திருநக்ஷத்ரம் மாத்திரம் பார்த்துதான் நிர்ணயிக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top