ஆசார்யன் தனியனை மடிசார் உடுத்திக்கொண்டு சேவித்தால் உத்தமம். பொதுவாக எப்பொழுதுமே க்ருஹணீகள் மடிசார் உடுத்திக்கொண்டு தான் இருக்கவேண்டும். அதனால் ஆசார்ய தனியன் சேவிக்கும் பொழுது மடிசாரில் இருக்கிறது என்பதுதான் ஏற்படும். அப்படி மடிசாரில் இல்லையென்றாலும் ஆசார்யன் தனியனைச் சேவிப்பது இன்னும் முக்கியம். அதனால் அவசியம் சேவிக்க வேண்டும்.