அடியேன், நித்யப்படி நம் ஆத்துப்பெருமாளுக்கு, சாளக்கிராம மற்றும் விக்ரஹம் இருப்பின் இரண்டுவேளை திருவாராதனம் செய்யலாமா அல்லது ஒருவேளை திருவாராதனம் மட்டுமா அடியேன்?

சாளக்கிராமம் மற்றும் விக்ரஹத்திற்கு, ஒருவேளை திருவாராதனம் செய்தால் போதும். இரண்டாவது வேளை, அதாவது ராத்திரிவேளையில் திருவாராதனம் பண்ணினால் விசேஷம், சுத்தமாக இருந்து பண்ண வேண்டும். பண்ணாவிட்டாலும் வெறும் பால் மட்டுமாவது நிவேதனம் செய்தால் போதும். நாம் அகத்தில் இருந்தோமேயானால் நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை நிவேதனம் பண்ண வேண்டும். இல்லயென்றால் பால் மட்டுமாவது நிவேதனம் பண்ண வேண்டும்.
சாளக்கிராமத்திற்குச் செய்ய முடியாது போனால் பெரிய தோஷம் ஒன்றும் கிடையாது. அதனால் நிர்ப்பந்தமாக பண்ண வேண்டும் என்பது கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top