எங்கள் பூர்வர்கள் திருநெல்வேலி கீழ்ப்பாட்டத்தில் இருந்து நெடுந்தெருவிற்கும் அதன்பின் ஸ்ரீரங்கத்திற்கு வந்து குடியேறினார்கள். எங்களின் குலதெய்வம் யார் என்று சரியாகத் தெரியவில்லை. ஒருகாலத்தில் கீழ்ப்பாட்டத்தில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிக்கோவில் இருந்ததாகவும் தற்போது அந்தக் கோவில் இல்லை மேலும் சக்கரத்தாழ்வார் அருகில் இருக்கும் வேறு ஒரு கோவிலில் ஏளியிருக்கிறார். நாங்கள் சிலநாட்கள் முன்பு நெடுந்தெருவில் இருக்கும் ப்ரசன்ன ராஜகோபால ஸ்வாமிக்கு திருமஞ்சனம் செய்தோம். நாங்கள் யாரைக் குலதெய்வமென்று ஏற்பது?

குலதெய்வம் யார் என்று தெரியவில்லை என்பதற்கு எப்படிப் பதில் சொல்லுவது என்று தெரியவில்லை.
பொதுவாக நாம் எல்லோருக்கும் குலதெய்வம் என்பது பெருமாள்தான்.

“ஸ்தோஷ்யாமி ந‌‌: குலத4நம் குலதை3வதம் தத்” என்று ஆளவந்தார் சாதித்திருக்கிறார்.
அதனால் ஏதாவது ஒரு பெருமாளை நீங்கள் குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
இக்கேள்விக்கான விடைய இங்கே உள்ள காணொளியில் விரிவாகக் கேட்டு அறியவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top