ஆசார்யன் திருவுள்ளம் உகக்கும்படி கைங்கர்யம் பண்ணவேண்டும். அவரின் ஆக்ஞையைக் கடைபிடிக்க வேண்டும், அதுவே அவர்களின் திருவுள்ள உகப்புக்குக் காரணமாய் அமைந்துவிடும்.
நேரே போய் ப்ரத்யக்ஷமாய், அதாவது அவருக்கு பிக்ஷை சாதித்தல் அல்லது பிஷை இலை எடுத்தல் போன்ற கைங்கர்யங்கள் செய்தால்தான் அவரின் திருவுள்ளம் உகக்கும் என்றில்லை. ஸ்ரீமதழகிய சிங்கர் ஸமாஶ்ரயணம் செய்து வைக்கும்போது தினமும் மந்திர ஜபம், திருவாராதனம் எல்லாம் பண்ணவேண்டி ஆக்ஞை இட்டிருப்பார் அவர் சொன்னபடி செய்தாலே போதும் அவரின் திருவுள்ளம் உகக்கும். நம் வர்ணாஶ்ரம தர்மம் பிசகாமலும், நித்ய கர்மானுஷ்டானம் விடாமலும் பண்ணினாலே ஆசார்யன் திருவுள்ளம் உகந்துவிடும்.