அடியேனின் ஆசார்யன் ஸ்ரீமத் அழகியசிங்கர். அவர் மடாதிபதி ஆனபடியால் உத்தமமான கைங்கர்யபர்களைக் கொண்டுள்ளதால் அடியேனைப்போன்ற சாமானியர்களுக்கு பெரிதாக ஶரீரரூபமாக கைங்கர்யம் செய்யும் வாய்ப்போ அல்லது தகுதியோ இல்லை. இருப்பினும் ஆசார்யனுக்கு கைங்கர்யம் செய்ய இயலவில்லையே என்று மனம் வருந்துகிறது. அடியேனைப் போன்ற சாமானியன் அழகியசிங்கர் போன்ற மடாதிபதிக்கு அவர் மனமுகக்கும்படி வேறு எவ்விதங்களில் கைங்கர்யங்களைச் செய்யலாம்?

ஆசார்யன் திருவுள்ளம் உகக்கும்படி கைங்கர்யம் பண்ணவேண்டும். அவரின் ஆக்ஞையைக் கடைபிடிக்க வேண்டும், அதுவே அவர்களின் திருவுள்ள உகப்புக்குக் காரணமாய் அமைந்துவிடும்.
நேரே போய் ப்ரத்யக்ஷமாய், அதாவது அவருக்கு பிக்ஷை சாதித்தல் அல்லது பிஷை இலை எடுத்தல் போன்ற கைங்கர்யங்கள் செய்தால்தான் அவரின் திருவுள்ளம் உகக்கும் என்றில்லை. ஸ்ரீமதழகிய சிங்கர் ஸமாஶ்ரயணம் செய்து வைக்கும்போது தினமும் மந்திர ஜபம், திருவாராதனம் எல்லாம் பண்ணவேண்டி ஆக்ஞை இட்டிருப்பார் அவர் சொன்னபடி செய்தாலே போதும் அவரின் திருவுள்ளம் உகக்கும். நம் வர்ணாஶ்ரம தர்மம் பிசகாமலும், நித்ய கர்மானுஷ்டானம் விடாமலும் பண்ணினாலே ஆசார்யன் திருவுள்ளம் உகந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top