கடையில் வாங்கிய வஸ்த்ரம் பட்டு வஸ்த்ரமாக இருந்தால் அப்படியே தரித்துக்கொள்ளலாம். பஞ்சினால் (Cotton) நெய்ததாக இருந்தால், அதை மஞ்சள் தடவி நனைத்து ஆசாரமாக உலர்த்தியபின் தரிப்பது என்ற அனுஷ்டானத்தை ஆவணி அவிட்டத்தின் சமயம் பெரியோர்கள் செய்வதை நாம் காணலாம். ஆவணி அவிட்டத்திற்குப் புதுவஸ்த்ரம் தரிப்பது என்று அனுஷ்டிக்கும் பெரியோர்கள் இவ்வாறாகவே செய்வர்.
தீபாவளி முதலான மங்கள சமயங்களில் புது வஸ்த்ரத்தை (துவைப்பதற்கு முன்) உடுத்தலாம். ஆனால், அது சற்றே மடி குறைவு (தீட்டு அல்ல்); மேலும் அது திருவாராதனம் செய்வதற்கேற்ற மடி கிடையாது.