மஹாளய பக்ஷம் பற்றி: மஹாளய பக்ஷம் முழுவதுமே ஶ்ராத்த தளிகை பண்ண வேண்டுமா? மஹாளய தர்ப்பணம் (மத்யாஷ்டமிக்குப் பின்) செய்தாயிற்று என்றால் அதன்பின் எப்போதும் போல் தளிகை பண்ணலாமா? தம்பதிகள் இருவரும் 15 நாட்கள் முழுவதுமே தலைக்குத் தீர்த்தமாட வேண்டுமா?

மஹாளய பக்ஷம் முழுவதும் ஶ்ராத்த தளிகை பண்ணவேண்டாம். என்றைக்கு மாஹாளய தர்ப்பணம் பண்ணுகிறார்களோ அன்றும் மற்றும் மாஹாளய அமாவாஸை அன்றும் ஶ்ராத்த தளிகை பண்ணுவது வழக்கம்.
மஹாளயபக்ஷம் 15 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்களாக இருந்தால், தம்பதிகள் இருவருமே 15 நாட்களும் ஸ்நானம் (தலைக்குத் தீர்த்தமாடுதல்) செய்யவேண்டும். சக்ருத்மஹாளயம் (அதாவது ஒரே ஒருநாள் மட்டும் தர்ப்பணம்) செய்பவர்கள், அன்று ஒருநாள் மட்டும் தீர்த்தமாடினால் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top