தைத்திரீயஆரண்யகத்தில் இரண்டாவது ப்ரஶ்நத்தில் ப்ரஹ்ம யஜ்ஞம் பற்றி வருகிறது. அங்கு மூன்று முறை ஆசமனம் பண்ணவேண்டும் என்பதாகவே சொல்லியிருக்கிறது. அங்கு மந்திரங்கள் சொல்லப்படவில்லை என்பது முதல் விஷயம். இரண்டாவது இந்த ஆசமனம் செய்வதினாலே, ரிக்குகள் ப்ரீத்தி அடைவதாகச் சொல்லப்படுகின்றது. ஆகையால் அதை அப்படியே அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்.