சந்தியாவந்தனம் நேரத்துடன் சம்பந்தப்பட்டது, அதற்குரிய நேரத்திலேயே செய்யவேண்டும். முடிந்தவரை, ஶக்தியுள்ளவரை குளித்தே சந்தியாவந்தனம் செய்யவேண்டும். உடம்பு அசௌகர்யமாக இருந்தால் உ.தா: ஜுரம் இருந்தால், குளிக்காமலேயே சந்தியாவந்தனம் செய்யலாம்.
அதாவது தீர்த்தமாட ஶக்தியில்லாதவர்கள் முகத்தை அலம்பிக்கொண்டு, நெற்றியிட்டுக் கொண்டு மந்திர ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாம்.
ஆனால், தீர்த்தமாடாமல் சந்தியாவந்தனம் செய்வதென்பது உடம்புக்கு உபாதையிருந்தால் மட்டுமே. உபாதைகள் இல்லாத பக்ஷத்தில், தீர்த்தமாடி விட்டுதான் சந்தியாவந்தனம் செய்வது பெரியவர்கள் வழக்கம்.