வேதம், உபநிஷத் ஆகியவற்றை உபநயனம் ஆனவுடனே ஆரம்பிக்கலாம்.
ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை, மந்த்ரார்த்த உபதேசங்கள் ஆகியவற்றை ஸமாஶ்ரயணம் ஆனவுடனே (புருஷர்கள்) ஆகலாம்.
எதையும் பரந்யாஸத்திற்குப் பின் என காத்துக்கொண்டிருக்க வேண்டாம்.
ஆனால் இன்றைய காலத்தில் ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை போன்றவையெல்லாம் சிறு வயதிலேயே சொல்லிக்கொடுக்கும் வழக்கம் வந்திருக்கிறது. ஆகையால் மஹான்கள்/ஆசார்யர்கள் சொல்லும்படிச் செய்யவும்.
குறிப்புகள்:
ஸ்ரீமத் இராமாயணம், பகவத்கீதை முதலியவற்றைக் கதையாகக் கேட்பது, சிறு குழந்தை வயதிலிருந்தே ஆரம்பிக்கலாம். ஆனால் மூலம் உபதேசம் பெறுவதற்குச் சில நியமங்கள் இருக்கின்றன.