சமீபத்தில் அடியேன் கேட்டறிந்து கொண்டது பஞ்ச ஸம்ஸ்காரம் அல்லது பரந்யாஸம் ஆனவர்கள்தான் ரஹஸ்ய த்ரயத்தை அனுசந்திக்க வேண்டும் என்று. அடியேனுக்கு இவை இரண்டும் இன்னும் ஆகவில்லை.ஆனால் அடியேன் வேதமும், ஸ்ரீமத் பகவத் கீதையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதன் மூலம் அஷ்டாக்ஷரம் மற்றும் சரம ஶ்லோகம் கேட்டறிந்தேன். மேலும், அடியேன் புரிந்துகொண்டது த்வயம் ஸ்ரீமத் இராமாயணத்தில் ஒரு பகுதியாக வருகிறது என்று. அடியேன் கேள்வி பரந்யாஸம் அல்லது ஸமாஶ்ரயணம் ஆகாதவர்கள் ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீமத் பகவத் கீதா மற்றும் உபநிஷத்கள் சேவிக்கக்கூடாதா?

வேதம், உபநிஷத் ஆகியவற்றை உபநயனம் ஆனவுடனே ஆரம்பிக்கலாம்.
ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை, மந்த்ரார்த்த உபதேசங்கள் ஆகியவற்றை ஸமாஶ்ரயணம் ஆனவுடனே (புருஷர்கள்) ஆகலாம்.
எதையும் பரந்யாஸத்திற்குப் பின் என காத்துக்கொண்டிருக்க வேண்டாம்.
ஆனால் இன்றைய காலத்தில் ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை போன்றவையெல்லாம் சிறு வயதிலேயே சொல்லிக்கொடுக்கும் வழக்கம் வந்திருக்கிறது. ஆகையால் மஹான்கள்/ஆசார்யர்கள் சொல்லும்படிச் செய்யவும்.
குறிப்புகள்:
ஸ்ரீமத் இராமாயணம், பகவத்கீதை முதலியவற்றைக் கதையாகக் கேட்பது, சிறு குழந்தை வயதிலிருந்தே ஆரம்பிக்கலாம். ஆனால் மூலம் உபதேசம் பெறுவதற்குச் சில நியமங்கள் இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top