நீங்கள் எதுவும் செய்யவேண்டாம், பெருமாளிடமும் ஆசார்யனிடமும் மஹாவிஶ்வாஸத்தைக் குறைக்காமல் இப்போது இருந்தால் போதும். அதையும் ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருக்கிறார், பரந்யாஸ சமயத்தில் மஹாவிஶ்வாஸம் குறைந்திருந்தால் அதையும் பெருமாள் உண்டாக்கிவிடுவான்.
ஆகையால் இப்போது எதையும் நினைத்துக் குழம்பிக்கொள்ள வேண்டாம், கவலைப்பட வேண்டாம், ப்ராயாஶ்சித்தம் பயம் என்று எதுவும் வேண்டாம். ஆசார்யனிடமும் பெருமாளிடமும் உள்ள மஹாவிஶ்வாஸம் குறையாமல் பார்த்துக்கொண்டால் போதும்.