அடியேன் உக்தி நிஷ்டையில் பரந்யாஸம் செய்துகொண்டேன். சில சமயங்கள் நம் பரந்யாஸம் சரியாக நடந்ததா என்று பயத்தினாலும், அறியாமையினாலும் யோசித்திருக்கிறேன். பரந்யாஸத்திற்கு, ஆசார்யன் மற்றும் எம்பெருமான் மீது மஹாவிஶ்வாஸம் வேண்டும் என்று புரிந்துகொண்டேன். தவறுதலாக நினைத்ததை எண்ணி இன்று வருந்துகிறேன். அகத்தில் இருக்கும் சாளக்கிராம் எம்பெருமானிடமும் ஆசார்யன் பாதுகையிடமும் பலமுறை மன்னிப்பு கேட்டிருக்கிறேன். என் பயமே என்னை இவ்வாறு தவறுதலாக நினைக்கச் செய்ததென்று. இதற்கு ஏதேனும் ப்ராயஶ்சித்தம் உண்டா?

நீங்கள் எதுவும் செய்யவேண்டாம், பெருமாளிடமும் ஆசார்யனிடமும் மஹாவிஶ்வாஸத்தைக் குறைக்காமல் இப்போது இருந்தால் போதும். அதையும் ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருக்கிறார், பரந்யாஸ சமயத்தில் மஹாவிஶ்வாஸம் குறைந்திருந்தால் அதையும் பெருமாள் உண்டாக்கிவிடுவான்.
ஆகையால் இப்போது எதையும் நினைத்துக் குழம்பிக்கொள்ள வேண்டாம், கவலைப்பட வேண்டாம், ப்ராயாஶ்சித்தம் பயம் என்று எதுவும் வேண்டாம். ஆசார்யனிடமும் பெருமாளிடமும் உள்ள மஹாவிஶ்வாஸம் குறையாமல் பார்த்துக்கொண்டால் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top