அடியேன் தஞ்சாவூரில் இருக்கும் ராஜ மடம் சந்தான ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் கைங்கர்யத்திற்காக இயன்றளவு பணம் அனுப்பிவந்தேன். அங்கே பிள்ளையார் இருப்பது சமீபமாகதான் அடியேனுக்குத் தெரியவந்தது அதன்பின் பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டேன். மேலும் அடியேனின் பணம் அப்பிள்ளையார் சந்நிதி கைங்கர்யத்திற்கும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். இதனால் அடியேனுக்குத் தேவதாந்தர சம்பந்தம் என்ற தோஷம் ஏற்பட்டிருக்குமா ஸ்வாமி?

தேவதாந்தர சம்பந்தம் என்ற தோஷம் இந்த இடத்தில் வராது. ஏனென்றால் மனசறிந்து தேவதாந்தரத்திற்கென்று கொடுக்கப்படவில்லை.
சென்ற சுதர்சன இதழ்களில் தேவதாந்தரங்களுக்கு என்று கோவில்கட்டுறோம் அதற்கு பண உதவி வேண்டும் என கேட்கும்போது, எத்தனையோ செலவுகள் நாம் செய்கிறோம் அது போல் பொது தர்ம காரியம் என்ற நினைப்போடு கொடுத்தால் தவறில்லை என்று.
இவ்விடத்தில் மனமறிந்து தேவதாந்தரத்திற்கு என்று, அவருடைய ப்ரீத்திக்கு, அவருடைய கைங்கர்யத்திற்கு எனக் கொடுக்கப்படாததால் எவ்வித தோஷத்தையும் தேவதாந்தர ஸம்பநதத்தையும் ஏற்படுத்தாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top